இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 174 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் (05) இதுவரை 08 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே தனிமைப்படுத்தல் நடவடிக்களுக்கு உட்படுத்தப்பட்டு வெளியேறியவர்கள் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.