முகவரிகள் அழிவடைந்ததால், கடல் வழியாக அனுப்பிவைக்கப்பட்ட 4,000 அஞ்சல் பொதிகள் மத்திய அஞ்சல் பரிமாற்று நிலையத்தில் தேங்கிக் கிடப்பதாக, அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட 1,500 பொதிகளுக்கான முகவரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உரிய தரப்பினரிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(தமிழ் மிரர்)