மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஏ.எச்.எம் நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் சோஹித ராஜகருணா ஆகியோரினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரையில் இவ்வாறு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவின் அடிப்படையில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவ்வித இடையூறும் இல்லை என மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் தலைவர் நீதிபதி நவாஸ் தெரிவித்துள்ளார்.
மூவரடங்கிய நீதிபதிகள் குழு உறுப்பினர்கள் மூவரும் இனக்கப்பட்டதான் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.