பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி : கட்டான பிரதேசத்தில் சம்பவம்

Rihmy Hakeem
By -
0

 



கம்பஹா மாவட்டம் - கட்டான, களுவாரிப்பு பிரதேசத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்றைய தினம் (21) இரவு 11 மணியளவில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் குறித்த தொழிற்சாலையில் சேவையாற்றும் 65 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அங்கிருந்த வெடிபொருட்கள் வெடித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

 தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை. சம்பவம் தொடர்பில் கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)