கையடக்க தொலைபேசி மற்றும் இலத்திரனியல் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து அரசாங்கம்

Rihmy Hakeem
By -
0


தொலைக்காட்சி, தொலைபேசி மற்றும் இலத்திரனியல் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானதாகும். அது குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

இன்று (06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார். (Siyane News)




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)