இந்த வருடத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர் தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதன்படி தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 14 ஆம் திகதியும்அத்துடன் உயர் தர பரீட்சை நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். (Siyane News)