மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது மரக்கிளை வீழ்ந்ததில் கான்ஸ்டபிள் மரணம்!

Rihmy Hakeem
By -
0


மினுவாங்கொடை பிரதேசத்தில் இருந்து 18 ஆம் கட்டை நோக்கி  மோட்டார் சைக்கிள் மூலம் பயணித்த ஒருவர் மீது மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

இதனால் பலத்த காயமடைந்த குறித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் 33 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என்று தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)