ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 920 ஆக அதிகரிப்பு!

Rihmy Hakeem
By -
0

 


ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 920ஆக உயர்ந்துள்ளது.

பக்திகா மாகாணத்தில் வீடுகள் இடிந்துகிடப்பதையும், காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

அரசின் பக்தார் செய்தி முகமை வெளியிட்ட செய்தியில் 920 பேர் இறந்ததாகவும், 600 பேர் காயமடைந்ததாகவும், மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணிக்கு இந்த நிலநடுக்கம் நடந்துள்ளது.

பிபிசி

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)