அரச நிர்வாகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தோல்வியடைந்துள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் ஊடாக பதில் ஜனாதிபதி ஒருவரை நியமிக்கும் சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் குறிப்பிடுவது போன்று பொருளாதார நெருக்கடியானது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

