கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இத்தொழிலை நடத்துவதற்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாதந்தோறும் நாற்பது மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
சில சமயங்களில் முட்டையின் விலை 70 ரூபாய் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும் என சங்கம் கூறுகிறது.
கடந்த சில மாதங்களாக கோழிப் பண்ணையாளர்கள், தீவனங்களை பெற்றுக்கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை உயர்வடைந்துள்ளமைக்கு இதுவே காரணமாகும்.
இவ்வாறான நிலையில், இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் 20 மில்லியன் அமெரிக்க டொலர், விலங்கு தீவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
