இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதன் மூலம் பெற்ற வெற்றிப் பணத்தில் 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை அவர்கள் நிதியுதவியாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக யுனிசெஃப் மூலம் குறித்த தொகையை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
