நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் திடீரென செயலிழந்த முதலாம் மின் பிறப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துகொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும் என அதன் ஊடக பேச்சாளர் அண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாம் மின் பிறப்பாக்கி திடீரென செயலிழந்தது.
அத்துடன் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், நாட்டில் தினசரி 3 மணிநேரம் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.