'தீர்த்தகிரியார்' இந்திய வீர விருது பெற்றார் சிரேஷ்ட எழுத்தாளர் ஸக்கியா ஸித்தீக் பரீட்

zahir
By -
0


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மாவனெல்லையைச் சேர்ந்த சிரேஷ்ட எழுத்தாளரும் பன்னூலாசிரியரும் ஓய்வுபெற்ற ஆசிரியையுமான திருமதி ஸக்கியா ஸித்தீக் பரீட் இந்தியாவின் 'தீர்த்தகிரியார்' வீர விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன், குமரி மாவட்ட தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், சேலம் மாவட்ட ஆத்தூர் ஸ்ரீ சக்ஸஸ் அகடமி & பவுண்டேஷன், திருச்சிராப்பள்ளி வீரமங்கை சமூக சிந்தனை அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து நடாத்திய பல்துறை சாதனையாளர்களுக்கான 'தேசத்தின் வீர விருதுகள்- 2022' வழங்கும் நிகழ்வில் எழுத்துத்துறையில் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்புக்காக, இலங்கையிலிருந்து சிரேஷ்ட எழுத்தாளரும் பன்னூலாசிரியருமான திருமதி ஸக்கியா ஸித்தீக் பரீட் இந்தியாவின் 'தீர்த்தகிரியார்' வீர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து கலந்து கொண்டவர்களில் 6 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டனர். அந்த 6 பேரில் ஒருவராக திருமதி ஸக்கியா ஸித்திக் பரீட் உம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எழுத்துத்துறையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் தன் வாழ்நாள் பூராகவும் எழுதிவரும் இவருக்கு இவ்விருது கிடைக்கப்பெற்றது சாலப் பொருத்தம்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)