அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவில் 150 புதிய வீடுகளை அமைப்பதற்கு அனுமதி ; விண்ணப்பங்களை அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ளவும் (விபரம்)

Rihmy Hakeem
By -
0

 

படம் - AI

2026 ஆம் ஆண்டில் அத்தனகல்ல பிரதேசத்திற்கு 150 புதிய வீடுகளை அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அத்தனகல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ருவன் மாப்பாலகம தெரிவித்தார்.


​"இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பொதுமக்களுக்கான விண்ணப்பங்களை, அந்தந்தப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் (සංවර්ධන නිලධාරී/DO) பெற்றுக்கொள்ள முடியும்."


"​பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)