கஹட்டோவிட்ட பிரதேசத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சுயதொழில் பயிற்சி செயலமர்வொன்று ( ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வு நாளை (24.01.2026) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கஹட்டோவிட்ட அல்-பத்ரியா மகா வித்தியாலயத்தில் (Al-Badriya Maha Vidyalaya) இடம்பெறவுள்ளதாக கஹட்டோவிட்ட 369 கிராம உத்தியோகத்தர் பிரிவின் மகளிர் சங்கம் தெரிவித்துள்ளது.
சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட ஆர்வமுள்ள பெண்கள் மற்றும் யுவதிகள் அனைவரையும் இச்செயலமர்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
குறிப்பு : பிரதேசத்திலுள்ள சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் இதில் கலந்து கொள்ள முடியும்.

