தேசிய இளைஞர் படையணியில் புதிய மாணவர் சேர்க்கை ஆரம்பம்: இளைஞர் யுவதிகளுக்கு அரிய வாய்ப்பு!
இலங்கை இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய இளைஞர் படையணியின் (NYC) புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 16 முதல் 28 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
பாடநெறி விபரங்கள்:
இம்முறை 03 மாத கால "வாழ்க்கைத் திறன் அபிவிருத்தி" (Life Skills) பாடநெறி முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் கீழ் பின்வரும் விடயங்கள் கற்பிக்கப்படும்:
- வாழ்க்கைத் திறன் அபிவிருத்தி: ஆளுமை மற்றும் தலைமைத்துவப் பயிற்சி.
- ஆங்கில மொழிப் பயிற்சி: தொடர்பாடல் திறனை மேம்படுத்துதல்.
- தகவல் தொழில்நுட்பம் (IT): கணினி சார் அடிப்படை அறிவு.
- துணிகரப் பயிற்சி (Adventure Training): உடல் மற்றும் மன உறுதிப்பாட்டிற்கான பயிற்சிகள்.
மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்:
பாடநெறியைத் தொடரும் மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளன:
- நாளாந்த வருகைக்கான கொடுப்பனவு.
- இலவச சீருடைகள்.
- ஆயுள் காப்பீட்டு வசதி.
- தேசிய இளைஞர் படையணியால் நடத்தப்படும் விளையாட்டு மற்றும் கலை விழாக்களில் பங்குபற்றும் வாய்ப்பு.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்:
பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு தேசிய இளைஞர் படையணியின் சான்றிதழுடன், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட City & Guilds சான்றிதழும் வழங்கப்படும்.
முக்கிய குறிப்பு: புதிய பாடநெறிகள் 2026 மார்ச் 16 அன்று ஆரம்பமாகவுள்ளன. இதற்கான இடங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதால் முந்துங்கள்!
மேலதிக விபரங்களுக்கு:
- தொலைபேசி: 0112 688 885 / 0710 377 377
- இணையதளம்: www.youthcorps.lk

