தொல்பொருள் சின்னம் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் எடுத்த புகைப்படத்தை ஒரு வருடத்திற்கு முன்பு சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பான குற்றச்சாட்டில்கைது செய்யப்பட்டுள்ள பொறியியல் பீட மாணவர்களுடைய பெற்றோர்கள் புதன்கிழமை 30
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை அவரது ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர்.

எதிர்வரும் 05 ஆம் திகதி வழக்கு  விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு ஆளுநர் சட்டரீதியான முன்னெடுப்புக்களைக்  கேட்டறிந்ததோடு, இந்த வழக்கில் மாணவர்கள் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணியை தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்து கொண்டார்.

இது தொடர்பாக பொலிஸார் புராதண தொல் பொருள் திணைக்களத்தில் இருந்து விரிவான அறிக்கையினை கோரியுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் அதனை ஆராய்ந்து தீர்ப்பினை நீதிமன்றம் வழங்குமென எதிர்பார்ப்பதாக சட்டத்தரணி ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் தெரிவித்தார்.

மேலும் புராதன தொல் பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி மந்தவலவை ஆளுநர் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார்.



சந்தேக நபர்களான குறித்த மாணவர்கள் திட்டமிட்டு வேண்டுமென்றே இந்தக் காரியத்தைச் செய்யவில்லை அது, தற்செயலாக இடம் பெற்ற விடயம் ஆகவே இது விடயமாக கரிசனை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட பணிப்பாளர் எதிர்வரும் வாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்புவதாக உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான  கே.எல்.எம். பரீட் ஆளுனரின் இணைப்புச் செயலாளர் முஹம்மத் றுஸ்வின் ஆகியோரும் கலந்து கொண்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.