இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கான 25 வது தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. 

நாடு பூராகவும் 84 மத்திய நிலையங்களில் இந்த தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக அந்த சங்கத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி யூ. ஆர். டி சில்வா கூறினார். 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் செயலாளர்களை தெரிவு செய்வதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது. 

இன்று காலை 08 மணிக்கு ஆரம்பமான மாலை 05 மணி வரையில் இடம்பெறவுள்ளது. 

உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக தமது சட்டத்தரணிகள் சங்கத்தின் அடையாள அட்டையினை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.