குவைத் நாட்டு தனவந்தர் அஹமட் சாலி அல்கந்தரி அவர்களின் நிதியுதவியில் கம்பஹா மாவட்டம், உடுகொட அரபா மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாடி வகுப்பறைக் கட்டிடம், தனவந்தர் அல்கந்தரி மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரினால் இன்று (23) மாணவர்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.ஏ.எம். ஹலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளசி, மாகாண சபை உறுப்பினர்களான ஷாபி ரஹீம், உபுல் மகேந்திர, அத்தனகல்ல பிரதேச சபை தவிசாளர் ப்ரியந்த புஷ்பகுமார, அல் ஹிமா சேவை நிறுவனத்தின் செயலாளர் அல்ஹாஜ் நூறுல்லாஹ்,  பாடசாலை நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.














8






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.