இப்படியும் நியூஸ் போடுங்கடா

பாகிஸ்தானின் வான் பரப்பை மூடிய பெட்சீட்டை தூக்கி எறிந்து திறந்து வைக்க மோடி உத்தரவு...அத்தனை பெரிய பெட்சீட்டைத் தேடி இந்திய ராணுவம் வேட்டை..

இந்தியா ஏர்போர்ஸில் இணைகிறார் தோனி..பாகிஸ்தானை அசரவைக்கப் போவதாய் கர்ஜனை..அப்ரிடி ஒப்பாரி வைத்து அழுதார்.

யுத்தம் வந்தால் இந்தியா பாகிஸ்தானைக் கைப்பற்றும் என்று  முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த வி.ஐ.பீக்கள் தப்பியோடிக் கொண்டு இருக்கின்றனர்.. கிரிக்கட் விளையாடும் காலத்தில் இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கிய கேட்டன் சர்மாவின் கடைசிப் பந்துக்கு சார்ஜாவில் சிக்ஸர் அடித்து இந்தியாவைத்  தூற்றிய பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஜாவிட் மியண்டாட் சற்று முன்னர்  தப்பியோட்டம்.எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் சென்றதால் பரபரப்பு..

இந்தியாவில் அத்தனை பள்ளிக் கூடங்களிலும் இருக்கும் உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் வெட்டி அகற்றப்பட்டது. முஹம்மட் அலி ஜின்னாவின் கனவைக் கொன்றுவிட்டோம் என்று மோடி பெருமிதம்..ஆமித் ஷா பாராட்டு...

பஞ்சாப் சிங்கம் ஹர்பஜன் சிங் பஞ்சாப் எல்லைக்கு வந்து கர்சித்தார்..இந்தக் கர்ஜனை லாகூர் வரை கேட்டதாகவும் மக்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியதாகவும் பாகிஸ்தானின் டான் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கிறது...

கதறியழுதபடி மோடிக்கு டெலி போன் செய்தார் இம்ரான் கான்..மோடி அதைக் கட் பண்ணி ரிஸீவரை ஓங்கி அடித்தார்..சுற்றி இருந்தவர்கள் கை தட்டி ஆரவாரம்..டெலிபோன் உடைந்து நொறுங்கியது..பாகிஸ்தானுக்கும் டெலிபோனுக்கு நடந்த கதியே ஏற்படும் என்று அறிவிப்பு...பாகிஸ்தான் கைப்பற்றப்பட்டதும் அகண்ட இந்தியாவாகிடும்.அதற்கும் சேர்த்து பிரதமராய் இருந்து கொள்ள மோடிக்கு கெபினட் விசேட அனுமதி..

பாகிஸ்தான் கைப்பற்றப்பட்டதும் அங்கே இருக்கும் மாடுகளை அழைத்து வர விசேட விமானங்கள் தயாராகின..முதல் விமானத்தில் பைலட்டாக  மோடியும் கோ பைலட்டாக உத்தரப் பிரதேஷ முதல்வர் யோகி ஆதித்தியநாத்தும் இருப்பார்கள்.ஏர்ஹோஸ்டாக தமிழிசை இருப்பார் .

காஷ்மீருக்கு யுத்தத்திற்கு செல்ல தமிழ் நாட்டில் இருந்து ஒரு படை அதிரடியாகத் தயார்..அனைவருக்கும் விஜய் காந்த் இன் படங்களைப் பார்க்குமாறு மோடி தடலாடி உத்தரவு.

திபெத், இந்தியாவின்  லடாக் வழியாக காஷ்மீர் , பாகிஸ்தானின் வடமேற்கு மாநிலங்கள் வழியாகப் பாயும் பிரசித்தி பெற்ற சிந்து நதியைப் பாகிஸ்தானுக்கு செல்லவிடாமல் தடுக்க அத்தனை ஏற்பாடுகளும் பூர்த்தி..முழு நதியையும்  உறிஞ்சிக் குடிக்க அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் தண்ணீர்ப் படை ஹிமாச்சல் மாநிலத்திற்கு விரைந்தது..இந்தத் திட்டம் சொதப்பினால் மூத்திரம் பெய்து நாசப்படுத்தும் பலே திட்டமும் தயார்..அதிர்ச்சியில் இம்ரான் கான்..

கண்ணீர் மல்க பாகிஸ்தான் இளம் பெண்கள் அனுப்பிய  மின்னஞ்சல்களால் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் இற்கு மாரடைப்பு..." இந்தியர்கள் அவர்களின் ப்ரொபைலுக்கு அங்ரி ரியாக்‌ஷன் போடுவதாய் அதிரடி புகார் ".

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.