(Ashraff.A.Samad)
இலங்கையிலும் வெளிநாட்டுகளிலும் வசிக்கின்ற இலங்கை மக்களிற்கும், நாட்டின் நலன்விரும்பிகள் அனைவருக்கும்  மிக மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிறைந்த 71 வது தேசிய சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.   
அந்நிய ஆட்சியில் இருந்து சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு அரும்பாடுபட்டு உழைத்த எம் தேசிய வீரர்களின் பங்களிப்புகளை நன்றியுணர்வுடன் நினைவுகூரும் நேரம் இது. அத்துடன் எங்கள் தாயகத்தை மீட்டெடுக்க  தம்முடைய உயிரை அர்ப்பணித்த வீரர்களுக்கு மரியாதை செய்வதற்குமான நேரமும் ஆகும்.
இலஞ்சம் மற்றும் ஊழல்,  போதைப்பொருள் பாவனை இல்லாமலும், சட்டத்திற்கமைய பயமின்றி பாதுகாப்புடன் மக்கள் நடமாடுகின்ற நிலையிலே சுதந்திரத்தின் உண்மைத்தன்மை உணரப்படும்.
நம் நாட்டை இறையாண்மை நாடாக மாற்றுவதற்கு எமது ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் பல நலன்புரி திட்டங்களை மேற்கொண்டார்.
எமது ஜனாதிபதி அவர்களின் முனைப்பு  போதையற்ற இலங்கையொன்றை உருவாக்குவதாகும், இதற்காக அனைத்து வயதினரிடமிருந்தும், அனைத்து  துறையினரிடமிருந்தான ஆதரவு தேவைப்படுகின்றது. ஆகவே சுதந்திரத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக்குவதற்காக நமது    ஜனாதிபதி அவர்களுடன் இணைந்து செயற்படுவோமாக.
எமது நாட்டில் மிகுந்த செழிப்பும், சந்தோஷமும், ஒற்றமையுடனும் கூடிய சமாதானமான வாழ்வு என்ற இலக்கினை மக்கள் அடையும் வரை நாம் தொடர்ந்து செயற்படுவோம்.  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.