பாதாள குழுவின் தலைவன் மாகந்துரே மதூஷுக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பொதுஜன  முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

பாதாள குழு தலைவன் மாகந்துரே மாகந்துரே பிரதேசத்தை சேர்ந்தவன் என்று  தவறான கருத்துக்களே சமூக வலைத்தளங்களில்  குறிப்பிடப்படுகின்றது. மாகந்துரே மதூஷ் கம்பறுபிடிய பிரதேசத்தை சேர்ந்தவர்.

இவ் விடயத்தில் என்னையும் எனது உறுப்பினர்களையும் தொடர்புபடுத்தி அரசியல் தூற்றுதல்களே இடம்பெறுகின்றது. எனது பிள்ளைகள் பாதாள குழுவினருடன் தொர்புகொள்வதற்கான எவ்விதமான அவசியமும் கிடையாது என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.