இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மூன்றாவது இருபதுக்கு கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

பதிலுக்கு இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது மழை குறிக்கிட்டதன் காரணமான போட்டி 17 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. 

அதனடிப்படையில் துடுப்அபாடுத்தாடிய இலங்கை அணி 15.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இடையில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. 

அதன்பின் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென்னாப்பிரிக்கா 5 - 0 எனக் கைப்பற்றியது. 

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.