நாத்தாண்டிய பகுதியில் இனவாத
வன்முறை செயல்களில் ஈடுபட்டமை
தொடர்பில் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த
31 நபர்களுக்கும் பிணை
வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் தலா ஐம்பதாயிரம்
ரூபா பெறுமதியான சரீரப்பினையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மாறவில மாவட்ட நீதவான் சிரிமேவன் மஹேந்திரராஜாவினால் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்
குறித்த பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான இனவாத வன்செயலினால் ஒருவர்
உயிரிழந்ததுடன் ஏராளமான
சொத்துக்களும் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
(Daily Ceylon)
கருத்துரையிடுக