முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட இனவெறித்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்றாமுல்லை ரோபட்வத்தை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசி ஒருவர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.
சம்பவம் நடைபெறும் பொது குறித்த நபர் மாத்திரம் வீட்டில் இருந்ததாகவும் தெரியவருகிறது.
அதேவேளை மினுவான்கொடை நகரில் ஒருவர் உயிரிழந்ததாக வெளியான தகவல்பிழையானது என சிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாம் ஆரிப் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.
மேலும் வன்முறை சம்பவங்களில் ஒரு உயிரிழப்பு மாத்திரமே உறுதி படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 
(நன்றி :  டேய்லி சிலோன்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.