மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சமூக வலுவூட்டல்  இராஜாங்க அமைச்சருமான அலிசாஹிர் மௌலானா மக்காவிலிருந்து விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தி....

தியாகத்தை உலகுக்கு பறைசாற்றுகின்ற ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் புனிதம் மிகுந்த மக்கமா நகரில் இருந்து வாழ்த்துக்களை தெரிவிப்பதில் உவகை அடைகிறேன்...

எங்களுக்கிடையே நிலவும் முரண்பாடுகள் எல்லாம் தளர்த்தப்பட்டு இஸ்லாம் எமக்கு காட்டித் தந்திருக்கும் சகிப்புத்தன்மை , தியாக உணர்வு, சகோதரத்துவம் , சகவாழ்வு என்பவற்றை கடைப்பிடித்து ஒற்றுமைப்பட்டவர்களாக சமூக உணர்வுடன் பயணிக்க இப்பெருநாள் தினத்திலே அனைவரும் உறுதி பூளுவதுடன்,

நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய தியாகத்தை வலியுறுத்தும் இந்த தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இந்த நாட்டில் அமைதியான நிரந்தரமான சமாதானத்திற்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும்  வேண்டிக் கொள்கிறேன்.

அனைவரும் வெள்ளை நிற இஹ்றாம் எனும் புனித ஆடையை அணிந்து பல மொழி பேசுகின்றவர்கள் பல நிறத்தவர்கள் பல் வேறு நாட்டவர்கள் புனித மக்கமா நகரின் அறபா மைதானத்தில் ஒன்று கூடி ஹஜ் வணக்கத்தை நிறைவேற்றி அல்லாஹ்விடம்  அழுது புலம்பி மன்னிப்புக்கோருவதுடன்,  தமது தேவைகளைக் கோரும் இந்த சந்தர்ப்பத்தில் இங்கு புனித ஹஜ் கடமைக்காக இலங்கையிலிருந்து வந்துள்ள நான் உட்பட அனைவரும் இலங்கை முஸ்லிம்களுக்காகவும் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் இலங்கையின் அமைதிக்கும் நிரந்தர சமாதானத்திற்காகவும் பிரார்த்திப்பதுடன் ,நாம் முகம் கொடுக்கும் பல்வேறு சவால்களும் அசௌகரியங்களும் நீங்கி  நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திடும் சூழல் அமைந்திடவும்,
கடந்த காலங்களில் நாம் பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்துள்ளோம். இன்னும் அவ்வாறான துன்பங்களும் துயரங்களும் ஏற்படாமலிருக்கவும் நாம் உளமாற பிரார்ர்த்திக்கவும் வேண்டுகிறேன்.

நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய பல்வேறு தியாகங்களை படிப்பிணையாகக் கொண்ட இந்த புனித நாட்களில் அவர்களின் தியாகத்தையும் அவர்களின் வழிகாட்டலையும் நாம் பின்பற்றி நடக்க வேண்டும்.
பொறுமையும் சகிப்புத்தன்மையும் இன்று நமக்கு அவசியமாகும். பொறுமையும் இறைவனிடம் பிரார்த்திப்பதும் தான் நமக்கான சிறந்த வழியாகவும் இருக்கின்றது.
அந்த வகையில் அதிகம் அதிகம் பிராத்தனையில் ஈடுபடுவோம் ....

அனைவருக்கும் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்கள் .

செய்யித் அலி ஸாஹிர் மௌலானா
பாராளுமன்ற உறுப்பினர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
மட்டக்களப்பு மாவட்டம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.