( மினுவாங்கொடை நிருபர் )

   நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு, 2015/2017 ஆம் கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்ட 4236 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள், எதிர்வரும் 8 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

   இவ்வாறு வழங்கப்படும் ஆசிரியர் நியமனங்களுள், 1404 தமிழ் மொழி மூல ஆசிரியர் நியமனங்களும், 428 ஆங்கில ஆசிரியர் நியமனங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

   தமிழ் மொழி மூல ஆசிரியர் நியமனங்களில் யாழ். கல்வியியல் கல்லூரி, வவுனியா கல்வியியல் கல்லூரி மற்றும்  மட்டக்களப்பு, அளுத்கம, அட்டாளைச்சேனை, கொட்டகல ஆகிய கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமாப் பட்டங்களைப்  பெற்றவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.

   இதன்பிரகாரம், முதன் மொழி தமிழ் - 173, இந்து சமயம் - 28, இஸ்லாம் - 23, கிறிஸ்தவம் - 37, மனைப்பொருளியல் - 44, தகவல் தொழில் நுட்பம் - 104, கணிதம் - 69, சங்கீதம் - 38, விளையாட்டும், உடற்கல்வியும் - 67, ஆரம்பக் கல்வி - 327, விஞ்ஞானம் - 122, இரண்டாம் மொழி தமிழ் - 50, சமூகக் கல்வி - 36, விசேட கல்வி - 30, நாடகமும் அரங்கியலும் - 15, விவசாயம் - 49, சித்திரம் - 59, வணிகக் கல்வி - 50, வடிவமைப்பு - 14, நடனம் - 25, மெகானிக்கல் வடிவமைப்பு - 04, நிர்மாண வடிவமைப்பு - 36, இலத்திரனியல் வடிவமைப்பு - 04 ஆகிய எண்ணிக்கையில் தமிழ் மொழி மூல ஆசிரியர் நியமனங்கள்  வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.