( மினுவாங்கொடை நிருபர் )

   ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 78,403 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
   இந்தத் தேர்தலில் 6,39515 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும், தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7,17918 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
   இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான தினங்களை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, (15) செவ்வாய்க்கிழமை  வௌியிட்டிருந்தது.
   அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தில் சேவையாற்றுவோர், எதிர்வரும் 31 ஆம் திகதியன்றும்,  நவம்பர் மாதம் முதலாம் திகதியன்றும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
   மாவட்டச் செயலகங்கள், தேர்தல் செயலகங்கள் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் சேவையாற்றுவோர், எதிர்வரும் 4 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்காக  தபால் மூலம் வாக்களிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
   குறித்த  தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு, நவம்பர் மாதம் 7 ஆம் திகதி, தாம் சேவையாற்றும் பிரதேசங்களிலுள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகங்களில் தபால் மூலம் தமது வாக்குப்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும்  ஆணைக்குழு அறிவித்துள்ளது.
   இது தவிர, ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள்,  நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல்  9 ஆம் திகதி வரை  முன்னெடுக்கப்படும் என்றும்,  தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும்  சுட்டிக்காட்டியுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.