ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியயை பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அமைப்பின் ஊடாக கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குகளை சிதறடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மதுகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரால் அமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்ட ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பொதுமக்களின் வாக்குகள் கிடைக்காத வகையில் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

கடந்த 4 வருடங்களில் சுதந்திர கட்சிகளால் நடாத்தப்பட்ட கூட்டங்கள், பேரணிகள் மற்றும் மே தின கூட்டங்களின் போது ஒரு நீள நிற கொடியை ஏனும் வைக்க, தற்போது ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பு என்று கூறிக்கொண்டு தலைவர்களாக முனைபவர்களுக்கு தேவை இருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.