ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று மாலை 5 மணிவரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும்.
இதன்படி இன்று காலை 12 மணிவரை கம்பஹாவில் 40 சதவீத வாக்குப் பதிவுகளும், கண்டியில் 55 சதவீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும் நுவரெலியாவில் 50 சதவீத வாக்குகளும், காலியில் 50 சதவீத வாக்குகளும் மற்றும் மாத்தறையில் 50 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஹம்பாந்தோட்டையில் 55% வாக்குகளும், கொழும்பில் 40% வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பொலன்னறுவையில் 52 சதவீத வாக்குகளும், அனுராதபுரத்தில் 50 சதவீத வாக்குகளும், பதுளையில் 60 சதவீத வாக்குகளும், மொனராகலையில் 55 சதவீத வாக்குகளும், இரத்தினபுரியில் 55 சதவீத வாக்குகளும் மற்றும் புத்தளத்தில் 50 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் களுத்துறையில் 50 சதவீத வாக்குகளும், குருணாகலில் 55 சதவீத வாக்குகளும், மாத்தளையில் 56 சதவீத வாக்குகளும், வவுனியாவில் 50 சதவீத வாக்குகளும், முல்லைத்தீவில் 45 சதவீதமான வாக்குகளும் மற்றும் கேகாலையில் 45 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் அம்பாறையில் 39 சதவீத வாக்குகளும், யாழ்ப்பாணத்தில் 44 சதவீத வாக்குகளும் மற்றும் கிளிநொச்சியில் 49 சதவீதமான வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் மன்னாரில் 40 சதவீத வாக்குகளும், மட்டக்களப்பில் 33 சதவீத வாக்குகளும் மற்றும் திருகோணமலையில் 54 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
கருத்துரையிடுக