முஸ்லிம் மக்களுக்கான பாதுகாப்பு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானால் மாத்திரமே கிடைக்குமென, ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.
கண்டி- மடவள பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ எமது நாட்டில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகளுக்கு அமைய, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 50 இலட்சம் வாக்குகளையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 14 இலட்ச வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
இம்முறை ஆறுமுகன் தொண்டமானின் 2 இலட்ச வாக்குகள், டக்ளஸ், அதாவுல்லா, ஹசன் அலி, பஷீர் சேகுதாவுத் ஆகியோரின் தலா ஓர் இலட்ச வாக்குகளுடன் 68 இலட்சம் வாக்குகளை கோட்டாபய பெறுவாரென்றார்.
(TM)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.