பொலிஸ் ஊடகப் பிரிவின் நடவடிக்கைகள் நேற்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஊடகப் பிரிவால் நேற்றைய நாளில் எந்தவித ஊடக அறிக்கைகளும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

அத்துடன் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கையடக்க தொலைப்பேசியும் பயன்பாட்டில் இல்லை என்பதோடு, பொலிஸ் ஊடகப் பிரிவின் நிலையான தொலைப்பேசியும் இயங்கவில்லை.

இது தொடர்பில் அததெரண தேடி பார்த்தது.

அப்போது பொலிஸ் ஊடகப் பிரிவின் செயற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தின் ஊடாக, புதிய தொழிநுட்பங்களுக்கு ஏற்ப முன்னெடுக்க முயற்சிக்கப்படுவது குறித்து தெரியவந்தது.

இதன் காரணமாகவே பொலிஸ் ஊடகப் பிரிவு தற்காலிகமாக இயங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.