கட்டுவன ஹெடிவத்த பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்ட சிலர் மீது டி 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தமை தொடர்பில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் கட்டுவன பகுதியை சேர்ந்த 50 வயதான எதிரிமானே மாலனி, 18 வயதான ஜயசேகர பத்திரன எனப்படும் ஹெசான் ஆகிய இருவர் உயிழந்தனர்.

இவர்கள் மீது கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்பான வழக்கு விசாரணை நீண்ட காலமாக தங்கல்ல நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் (07) அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

ஜுலம்பிட்டி பகுதியை சேர்ந்த 49 வயதான ஜுலம்பிட்டி அமரே எனப்படும் கீகனகே அமரசிறி என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.