பிரேமதாசவிற்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்குவது தொடர்பாக கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரமளவில் தனது உடன்பாட்டை தெரியப்படுத்துவார் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

காலி அக்மீமன பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சஜித் பிரேமதாசவிற்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டவுடன் அவருக்கு பிரதமர் வேட்பாளராக எதிர்வரும் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கான முழு அதிகாரமும் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் அடுத்த பிரதமராக சஜித் பிரேமதாசவே நியமிக்கப்படுவார் எனவும் விஜயபால ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.