பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

சாட்சியம் வழங்குவதற்காக இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பேராயருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை வௌியிடுவதற்கும் மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் இந்த ஐவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.