பிறந்ததென்னமோ கேகாலையில் தான் ஓரிரு வருடங்கள் இரம்புக்கணையில் வாப்பா வீட்டாருடன்…

எதுவும் புரியாத மழலை வயது அன்பை கொட்டி வளர்த்தாராம் ஆசை ஆசையை பேசுவாராம் கைவீசி கடை கூட்டிப்போவாராம் அழகழகாய் போட்டோ எடுப்பாராம்

இவைகள் கூட உம்மா சொல்லித் தான் தெரியும் ஏனெனில் நான் அறிந்த வயதில் என் வாப்பா இறைவனிடம்… அறியும் வயதில் அடைக்கலம் எனக்கு உம்மா வீட்டார்

என் குறும்புகள் சாச்சி மாருடன் களவு அடிக்காமல் சென்ற மொண்டசூரி என் நினைவில் என்றும்

சிறியதாய் ஒற்றை யடிப்பாலம் சேட்டைகளுடன் சாச்சியோடு சென்றடையும் பொழுதுகள் தெல்கஹகொட ஜும்ஆ பள்ளியின் ஒரு பக்கம் தான் எமது மொண்டசூரி படியேறித்தான் செல்ல வேண்டும்
கபுருத் தோடமும் அந்த ஸியாரமும் கொஞ்சம் புதினமானவை தான், நான் இருந்த வயதில்….அழகான வயல்வெளி ஆங்காங்கே சிற்சில பாதைகள் மறக்க முடியாத அனுபவம் தான் இன்றும்..ஆனால்., சில வருடம் தான், அங்கும் என் வாழ்க்கை நிலைக்கவில்லை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.