( ஐ. ஏ. காதிர் கான் )

   கொழும்பு - 09, தெமட்டகொடை, கைரிய்யா மகளிர் கல்லூரியின் வருடாந்த (மெய் வல்லுநர்) இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், கல்லூரி அதிபர் திருமதி ஏ.எல்.எஸ். நஸீரா ஹஸனார் தலைமையில், கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில், (26) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

   இதில், ஹம்ரா இல்ல (சிவப்பு) அணியினர் 325 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்திற்குத் தெரிவாகி, 2020 ஆம் ஆண்டுக்கான சாம்பியன் வெற்றிக்  கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. 

   இரண்டாம் இடத்திற்கு ரவ்தா இல்ல (ஆரஞ்சு) அணியினர் 310 புள்ளிகளையும், மூன்றாம் இடத்திற்கு வர்தா இல்ல (ஊதா) அணியினர் 290 புள்ளிகளையும், நான்காம் இடத்திற்கு ஸர்கா இல்ல  (நீலம்) அணியினர் 280 புள்ளிகளையும் பெற்று, முறையே வெற்றிக் கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண்டனர்.

   இந்நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர்களான மொஹமட் பாயிஸ், மொஹமட் பைரூஸ் உள்ளிட்ட அதிதிகள் பலர்  கலந்து சிறப்பித்தனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.