கூகுல் நிறுவனம் சீனாவில் உள்ள தனது செயற்பாட்டு அலுலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசிற்கு மத்தியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஹொங்கொங் மற்றும் தாய்லாந்தில் உள்ள அலுவலகமும் மூடப்படவிருப்பதாக அந்த தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக இந்த அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தமது வீடுகளில் இருந்தே தமது கடமைகளை மேற்கொள்ளுமாறு கூகுல் நிறுவனம் அறிவித்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.