ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாச செயற்படுவார் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

(adaderana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.