20ஆவது welcome to our mosque அம்பாந்தோட்டை ஜும்ஆ பள்ளிவாசலில் இல் கடந்த பிப்ரவரி 25-ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுமார் ஆயிரத்து இருநூறு பேரளவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளவத்தை இஸ்லாமிய கற்கைகள் நிறுவனம் (CIS) மற்றும் அம்பாந்தோட்டை ஜும்மா பள்ளி நிர்வாகம் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வியாபார சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நாடளாவிய ரீதியில் CIS நிறுவனம் மேற்படி நிகழ்வை ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(சபீர் காமில்)








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.