ஐக்கிய  தேசியக் கட்சியின் நேற்றைய செயற்குழு கூட்டத்தின் தேசிய சமாதான கூட்டணியை வழிநடத்திச் செல்லும் அதிகாரங்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமே வழங்கப்பட்டுள்ளனவென அந்த கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 
அதேபோல் மேற்படி கூட்டணியின் மத்திய செயற்குழுவை நியமிக்கும்போது 60 வீதமானவர்களை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் ஏனைய 40 வீதமானவர்களை பங்காளி கட்சிகளிலிருந்தும் தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஐ.தே.கவிலிருந்து குறித்த கூட்டணியின் மத்திய குழுவுக்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களை தீர்மானிக்கும் அதிகாரங்களை ஐ.தே.க தலைமைத்துவத்துக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.