பண்டாரகம, கல்கொட சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி நேருக்க நேர் மோதிக் கொண்டதில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.


விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் அவருடைய இரு குழந்தைகளும் பலத்த காயங்களுடன் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது.

8 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.