ஊரடங்கு சட்டம் அத்தியாவசிய சேவைகளை பராமரித்து செல்வதற்கு இடையூறாக அமையாது என அமைச்சரவை இணை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், விசேடமாக சுகாதார பிரிவு, பாதுகாப்பு பிரிவு, தனிநபர் பாதுகாப்புக் சேவைகள் , துறைமுகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்கள் ஆகிய சேவைகளுக்கு இந்த ஊரடங்கு சட்டம் எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
ஏதேனும் அத்தியாவசிய செயற்பாடுகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்று அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான அறிக்கை மதியம் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது வார இறுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் வீடுகளிலிருந்து வெளியேறாமல் தானாகவே தனிமைப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுமாறும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக புறக்கோட்டை சந்தை இன்று பிற்பகல் 2 மணி வரை திறக்கப்படும் பின்னர் அதனை சுற்றியுள்ள பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படும் எனவும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மெனிக் சந்தை மீண்டும் திறக்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்தார்.
(AdaDerana)
கருத்துரையிடுக