கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளில் முடங்க நேர்ந்துள்ள பிள்ளைகள் மற்றும் இளம் வயதினர்களுக்காக ஒன்லைன் முறையில் உளவள ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இதற்காக இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது பேஸ்புக் பக்கத்தின் ஊடாக வீடியோ காணொளிகளை ஒளிபரப்பும். 

தற்போது சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தைச் சேர்ந்தவர்கள் வெளியில் சென்று விளையாட முடியாமலும், சமவயதைச் சேர்ந்தவர்களுடன் பொழுதைக் கழிக்காமலும் வீடுகளில் முடங்க நேர்ந்துள்ளது.

இதனால் ஏற்படக்கூடிய உளவியல் தாக்கங்களைக் கருத்திற்கொண்டு சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது பேஸ்புக் பக்கம் மூலம் ஒன்லைன் கவுன்சலிங் சேவைகளை வழங்குகிறது.

பேஸ்புக் பக்கம் -  https://www.facebook.com/hpbsrilanka/

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.