இந்தியாவில் தங்கியுள்ள 101 மாணவர்களை நாளைய (23) தினம் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் அமரிட்சர் நகரத்தில் தங்கியுள்ள மாணவர்களே யூ.எல்.146 இலக்க விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். 

இதேவேளை, பாகிஸ்தானில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்கள் நேற்று மாலை (22) இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர். 

லாகுர் நகரில் இருந்து 93 பேரும் கராச்சி நகரில் இருந்து 20 பேரும் இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். 

இவர்கள் புனானை மற்றும் வெருகல் தடுப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை கோயம்புத்தூர் நகரில் இருந்து 117 பேரும், நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து 93 பேரும் எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்துவர உள்ளனர்.

Adadreana 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.