கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத் தனமான பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களால் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களையும் நினைவுகூறும் முகமாகவும் நாட்டுக்கு நிலையான சமாதானத்தையும் சகவாழ்வையும் வேண்டியும் அனைத்துப் பள்ளிவாயல்களும் நாளை 2020 ஏப்ரல் 21 ம் திகதி அன்று காலை 8.40 மணி முதல் 8.55 மணி வரையில் விஷேட நிகழ்ச்சியொன்றினை ஏற்பாடு செய்யுமாறு இலங்கை வக்ப் சபையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் வேண்டிக்கொள்கின்றன.

நிகழ்ச்சி நிரல்:

8.40 மணி–கிராஅத்
8.45 – 8.47 மணி–இரண்டு நிமிட மௌனம். ( இறந்தவர்களை கௌரவிக்க )
8.47. மணி–துஆ பிரார்த்தனை
8.55 மணி – நிறைவு

கிராஅத்துக்கும் துஆவுக்குமான ஒலி நாடா அல்லது வழிகாட்டல்கள் அனுப்பப்படும். இதற்காக ஒலிபெருக்கியைப் பாவிக்கவும்.

பள்ளிவாயல் இமாம் மற்றும் முஅத்தின் ஆகியோர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்.

தேசிய மட்டத்திலான முஸ்லிம் நிகழ்ச்சி கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளியில் நடைபெறும்.

ஏ.பி.எம்.அஷ்ரப்
பணிப்பாளர்,
இலங்கை வக்ப் சபை மற்றும்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.