உலகம் பூராகவும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. தாய்மையினை போற்றும் வகையில் நேற்று அன்னையர் தினம் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் அந்த தாய்மையினையே மிகவும் மலினப்படுத்தும் வகையிலான சம்பவம் ஒன்று மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிக்குட்பட்ட ஆனைகட்டியவெளி பகுதியில் சமிளயடிவட்டை,கம்பியிறக்கம் பகுதியில் உள்ள கல் உற்பத்திசெய்யும் பகுதியில்  பிரதேசத்தில் தாகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர், அதனை நாய்க்கு இரையாக்கிய சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

நேற்று (10) மாலை 6 மணியளவில் கல்லுவாடியில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் நாய் ஒன்று இறந்த சிசு ஒன்றின் உடலை இழுத்துச் செல்வதை கண்டு கிராம உத்தியோகத்ததருக்கு தகவல் வழங்கியதையடுத்து சிசுவின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிசு தொடர்பில் குறித்த பகுதியை சேர்ந்த 40வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரை வெல்லாவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் கடந்த இரண்டு வருடங்களாக மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில்புரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மகனுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக தனது வீட்டுக்கு வந்துசென்ற ஒருவராலேயே குறித்த பெண் தாய்மையினையடைந்ததாகவும் நேற்று குறித்த குழந்தையினை வீட்டுக்கு அருகில் பிரசவித்த நிலையில் அதனை கைவிட்டதாகவும் இதன்போது அப்பகுதியில் நாய்கள் குறித்த குழந்தையினை இழுத்துச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த பெண்ணுடன் தகாத உறவினைக்கொண்டிருந்த நபரினையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் மற்றும் மரண விசாரணை அதிகாரி,நீதிபதி ஆகியோரின் விசாரணைகளை தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

குறித்த சிசு மரணம் தொடர்பான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கிருஷ்ணகுமார் - மட்டக்களப்பு

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.