(எம்.ஆர்.எம்.வஸீம்)

பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரை உத்தியோகபூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை. ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்தியில் எந்தவித உண்மை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவின் கைச்சாத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2020 பாராளுமன்ற தேர்தலுக்குரிய அஞ்சல் வாக்கு அடையாளமிடுவதற்கான நாட்கள் தேர்தல் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்கள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தலொன்று விடுக்கப்பட்டிருப்பதாகவும் சம்பிரதாய மற்றும் நவீன ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

தேர்தலுக்குரிய பணிகள் மேற்கொள்ளப்படும் நாட்களை குறிப்பதற்கான எந்தவொரு தேர்தல் ஆணைக்குழு பத்திரமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

அவ்வாறானதொரு ஆவணத்தை தயாரிக்கவும் இல்லை என விடய பொறுப்பு அலுவலர்களும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகமும் எனக்கு அறிவித்துள்ளனர்.

எனவே எனது அல்லது உரிய முறையில் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் ஊடக அறிவித்தல் ஒன்றின் மூலம் உறுதிசெய்யப்படும்வரை இவ்வாறான நாள் குறித்தல்களை பற்றிய செய்திகளை பரப்பாமல் இருக்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களிடமும் தேர்தல்கள் ஆணைக்குழு விநயமாக கேட்டுக்கொள்கின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.