ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கட்சியின் கம்பஹா மாவட்டத்திலுள்ள பிரதேச அமைப்பாளர்களை நேற்றைய தினம் (07) மள்வானையில் வைத்து சந்தித்தார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் சீராஸ் மொஹமட் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சீராஸ் மொஹமட் அவர்களை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்ட மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினால், சீராஸ் மொஹமட் இன் வெற்றிக்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

மேலும் கஹட்டோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த ரிஹான் அவர்களின் திருமண வீட்டில் (மள்வானை) மு.கா. தலைவர், உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர் சீராஸ் உள்ளிட்ட அனைவருக்கும் இராப்போசனம் விருந்து வழங்கப்பட்டது.






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.