முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியைப் முன்னெடுக்காத 3061 பேருக்கு மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாள காலப்பகுதியல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

முகக்கவசம் அணியாமை தொடர்பில் 2093 பேரும் சமூக இடைவெளியைப் முன்னெடுக்காத 968 பேரும் இவ்வாறு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த 349 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த 158 பேரும், ஐய்ஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த 14 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபானங்களை தம்வசம் வைத்திருந்த 206 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்ட 771 பேரும் இந்த விசேட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.